Unlimited Quote Collections
Organize your favorite quotes without limits. Create themed collections for every occasion with Premium.
" "Truth is one: (though) the wise call it by various names.
Jawaharlal Nehru (14 November 1889 – 27 May 1964) was a central figure in India during the middle-third of the 20th-century. He was a principal leader of the Indian independence movement in the 1930s and 1940s. Upon India's independence in 1947, Nehru served as the country's prime minister for 17 years.
Biography information from Wikiquote
Organize your favorite quotes without limits. Create themed collections for every occasion with Premium.
Related quotes. More quotes will automatically load as you scroll down, or you can use the load more buttons.
Do you propose to repeat the unfortunate happenings in Bengal by killing the Muslims in Bihar? Is this the way in which you are showing your culture and civilisation of which you are so proud? .. You should be ashamed of your acts of lawlessness. I urge upon you to cry a halt even now and restore peace.
கடிதம் தேதி 07.12.1947
சில மாநிலங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிய செய்திகள் எனக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான இடங்களில் தடை உத்திரவுகளை மீறி இவை நடத்தப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள் இந்தச் சட்ட மீறலுக்கெதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கைகள் எடுக்கும் உத்திகள், சுதந்தரத்தில் நான் தலையிட விரும்பவில்லையெனினும் இப்படி நீங்கள் செய்ததன் பின்விளைவுகள் மிகப் பெரியதாக இருக்குமென்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு தனியார் ராணுவத்தைப் போலச் செயல்படுகிறது என்பதற்கும் நாஜிப் படையினரின் அமைப்பையும் செயல்பாடுகளையும் பின்பற்றுகிறது என்பதற்கும் நம்மிடம் நிறையவே சான்றுகள் உள்ளன. மனித உரிமைகளில் தலையிடுவதல்ல நமது கொள்கை. ஆனால் மனிதர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிப்பது அவற்றை எப்படி உபயோகிப்பதென்று சொல்லிக் கொடுப்பது போன்ற செயல்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது. அனைவருக்கும் தெரிந்தே ஆர்.எஸ்.எஸ். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கெதிரானச் செயல்படுகிறது என்ற காரணத்தாலே அதற்கெதிராக நடவடிக்கையெடுக்கத் தேவையில்லை. சட்டங்களுக்குட்பட்ட அதன் பிரசாரங்களை நீங்கள் அனுமதிக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள் எல்லை மீறிப் போகின்றதால் மாநில அரசுகள் அதன் நடவடிக்கைகளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். தேவையெனத் தோன்றினால், அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாஜி இயக்கம் ஜெர்மனியில் எப்படிக் காலுன்றியது என்பதைப் பற்றி எனக்கு ஒரளவுத் தெரியும். சொந்தமாகச் சிந்தித்துச் செயல்படும் திறமை குறைவாக இருந்து, வாழ்க்கையில் ஒரு பிடிப்புமில்லாமல் இருந்த நடுத்தரக் கீழ்மட்ட மக்களை இந்த இயக்கம் தனது செயல்பாடுகளாலும் பலமான கட்டுப்பாடுகளாலும் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. நாஜிக் கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் சாதாரண மக்களும்கூட புரிந்து கொள்ளும்படியாக இருந்தன. கடைசியில் அந்தக் கட்சியே ஜெர்மனியின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. இம்மாதிரியான செயல்களை இந்தியாவிலும் அனுமதித்தால் அவற்றின் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். இந்தியா நிச்சயமாக அதிலிருந்து தப்பிவிடும். ஆனால், அதனால் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாது.